ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பறையர்கள் யார்?

பறையர்கள் யார்??? !!!

என்னைப் பற்றிய ஒரு சிறு தகவல்கள்.

நான் பறையன் .
என்னுடைய பெயர் சி.சாம் பறையர்.

நான் தமிழ்நாடு பறையர் பேரவை என்னும் மாந்த நேய மக்கள் அமைப்பை செயல் படுத்திக்கொண்டு இருக்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் இராசபாளையம்.மதுரையில் இருந்து தென்காசி /குற்றாலம் செல்லும் வழியில், நடு மையத்தில் உள்ளது.
நான் பள்ளிப் படிப்பை, என்னுடைய பிறந்தாங்குடியில் சோமையாபுரம்
சி.எஸ்.ஐ {தென் இந்தியத் திருச் சபை } மூலம் உருவாக்கப் பட்ட ஆரம்பப் பள்ளியில் படித்தேன் ஐந்தாம் வகுப்பு வரையில்.
மேலும் ஆறாம் வகுப்பு,
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த,சத்திரப்பட்டி என்னும் பட்டிக்காட்டில் உள்ள ,
சாமிநாதபுரம் பள்ளியில் ,விடுதியில் தங்கிப் படித்தேன்.
மீண்டும் ஏழாம்வகுப்புக்கு என்னுடைய சொந்த ஊரின் அருகிலுள்ள திருவில்லிபுத்தூரில் உள்ள ,சி.எம்.எஸ். உயர் நிலைப் பள்ளியில் மீண்டும் படித்து,பெரிய பத்து என்று சொல்லும் பதினோராம் வகுப்பு படித்து முடித்தேன்.
என்னுடைய கல்லூரிப் படிப்பான புகுமுக வகுப்பை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள,
தூய யோவான் கல்லூரியில்(செயின்ட் ஜான்ஸ் கல்லூரி ) படித்தேன்.
அதன் பின்பு,
தி அமெரிக்கன் கல்லூரியில்
இழங்களைப் பட்டப் படிப்பு , பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ்)படித்து முடித்தேன்.
பள்ளிப் படிப்பு முதல் இன்று வரையில் நான் பிறந்த,என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு இந்த பறையர் இனத்தின் விடுதலைப் பணிக்கு என்னை யாரும் அழைத்ததும் இல்லை,
நானும் எந்த ஒரு தீண்டாமையையும் அனுபவவித்ததும் இல்லை.
என்றாலும் நான் இதுவரையில்,
திருமணமே செய்யாமல் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்.
நானும் கல்லூரிப் பருவத்தில்,
மது, மாது, சூது,பேய் ,பிசாசு, பேடை, பெட்டை என்று அனைத்தையும் அறிந்து , தெரிந்து கொண்டு,அவைகள் அனைத்தையும் அனுபவித்து,இன்று வரையில் ஐம்பது அகவையைத் தாண்டியும் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு பெரிதாக யாரும் குருக்களோ ,அல்லது வேறு யாரும் என்னை இந்த பணியை செய்யச் சொல்லவில்லை.இது எப்படியோ என்னுடைய நாடி நரம்பில் மரபணுவில் உள்ள ஒரு செயல்.
நானும் படித்தேன்.ஒரு வேலையை பார்த்துவிட்டு குடியும் குடித்தனமாக மாறலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவில்லை.
நானும் ஒருபோதும் என்னுடைய பறையர் என்னும் அடையாளத்தை எங்கேயும் எப்போதும் மறைத்ததில்லை. அதற்க்கு கிடைத்த பரிசு நான் ரெம்பவும் நல்லவன் என்பதே.
நானாக என்னை தயார் செய்துகொண்டேன்.பின் நாளில் அறிவர் அம்பேத்கர்கர் நூல்களைப் படித்தேன்.
பறையர்களுக்குப் போராடிய மாவீரர்கள் யாரவது உண்டா?என்று தேடி பிடித்து அலைந்து கொண்டு பலவித் நூல்களைப் படித்து தெரியும்போது எனக்கு புறநானூறு எழுதிய மாங்குடி மருதன் கிழார்
துடியன்,பாணன்,பறையன்,கடம்பன்
என்றின் நாங்கல்ளது வேறு குடிகளும் இலவே ....
புறநானூறு ...முன்னூறி முப்பது ஐந்து
பதினேழாம் வரியில் சொலப்பட்டதை ...
வாசித்து வாசித்து...
மிகவும் பெருமை கொண்டேன்.
என்னை யாரும் உருவாக்காமலே, நானே என்னுடைய பிரையர் இனத்தின் வரலாறுகளைத் தேடிக் கண்டு பிடித்த ஒரு பெருமை எனக்கு.அது ஒரு மமதை என்றும் சொல்லலாம்.
அதனால் கண்டு பிடிக்கப் பட்ட மாபெரும் தலைவனான இரட்டைமலை சீநிவாசன்பரயனே பறையர்களின் முதல் விடுதலைப் போராளி என்று தெரிந்து கொண்டு
அம் மாவீரன் உருவாக்கிய
தமிழ் நாடு பறையர் மகாசனம்
தான் இன்று
தமிழ் நாடு பறையர் பேரவை
என்னும் பெயரில் இயங்கி வருகிறது.
எனவே பறையர் இனத்தின் விடுதலை விரும்பும் அனைவரும் மனமார போற்றப் படும் இப் பறையர்பெரவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தன் ஆர்வமாக செயல் படும் அனைத்துப் பறையர்களையும் அழைக்கிறோம்.
வரலாறு என்னை விடுதலை செய்யும்.
வரலாறு தெரியாத எந்த ஒரு மாந்த இனமும் ...
தன் வரலாற்றை மீட்டுஎடுக்க முடியாது....
இதுவே வராலாறு நமக்கு காட்டும் பாடம்.
எனவே ஞானம் உள்ள ஞானவெட்டியான் பரம்பரையே,
நாடாண்ட நந்தகுல அரசப் பறையற்குலமே,
வா...
இப் பறையர் இனத்தின் மாந் களத்தின் வரலாறுகளை
மீட்டு ....
மீண்டும் நாடாள அணிதிரள் ...அறிவர்கூட்டமாய்.
உன்ன்டையபங்களிப்பை ,நீங பிறந்த உன்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளை மீட்டு இம் மண்ணின் மைந்தர்கள் மீண்டும் நாடாள பணி செய்ய வா ...வா... என்று அனைத்துப் பறையர் இனத்தின் நல்ல உள்ளங்களையும் அழைக்கிறோம்.
வரலாறு உன் கையில்..
வரலாறு இல்லாத எல்லா சாதியையும் ஆட்சி செய்து விட்டது..வரலாறு உள்ள பறையர் இனம் எப்போது ஆட்சி செய்யப் போகிறது...
விடுதலையும்...விடியலும் உன்கையில்...
நாளையப் பொழுது உன்னுடைய பறையர் இனத்தின் விடியலில்..
புறப்பட்டு பறைய ..உன் விடியலை நோக்கி..
என்றும் பறையர் விடுதலைப் பணியில்
சி.சாம் பறையர்.
````````````````````````````````````````````````````````````````````````````




பறையர்கள் யார்?

யார்